தட்டுப்பாடு இல்லாமல் சந்தைக்கு முட்டை மற்றும் கோழி இறைச்சி

Date:

முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 35 முதல் 36 ரூபாய் வரை விற்பனையாகிறது.

எவ்வாறாயினும், நாட்டின் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப முட்டையின் விலை தீர்மானிக்கப்படுவதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் தேவை அதிகரிக்கலாம் எனவும் அஜித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 45 ரூபாவிற்கும் குறைவாகவே தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரிசி மற்றும் சோளத்தின் விலை உயர்வினால் முட்டை ஒன்றின் உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழி இறைச்சி உற்பத்தி உபரியாக இருப்பதால், கோழி இறைச்சியை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜிக் குணசேகர தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...