திலித் எம்பி முன்வைத்துள்ள கோரிக்கை

Date:

சபைக்குள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களின் முன்னாள் இருக்கும் கலாநிதி, பேராசிரியர், வைத்தியர் போன்ற தொழில்சார் அடைமொழிகளின் பயன்பாட்டை நீக்க வேண்டுமென சர்வசன அதிகார கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். 

பாராளுமன்றில் இடம்பெற்ற புதிய சபாநாயகர் நியமனத்தின் பின்னர், சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் அதேவேளை, புதிய சபாநாயகரால் சுயாதீனமாக செயற்பட்டு சபையின் கௌரவத்தை பாதுகாக்க கூடியதாக இருக்குமென நம்புகிறேன். அதேபோல் நீண்ட காலம் இருந்து வந்த பாராளுமன்ற சம்பிராதயங்களை பாதுகாக்க கூடியதாக இருக்குமெனவும் நம்புகிறேன். 

இருந்த போதும், இந்த பிரச்சினை தோற்றம் பெற்ற விதம், பின்னணி என்பவற்றையும் கருத்திற்கொண்டும் ஏனைய விடயங்களையும் கருத்திற் கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களின் முன்னால் இருக்கும் கலாநிதி, பேராசிரியர், வைத்தியர் போன்ற தொழில்சார் அடைமொழிகளை என்பவற்றை சபை நடவடிகைகளில் இருந்து நீக்க வேண்டும். 

அவ்வாறு நீக்குவது எமது அரசியல் செயற்பாடுகளுக்கு ஏற்புடையதாக இருக்கும். இது சமூக வேறுபட்டை காட்டுகிறது. பல்வேறு தொழில் துறை சார்ந்தவர்கள் இந்த சபையில் இருக்கிறார்கள். 

பேராசிரியர் என்பவர் பல்கலைகழகங்களுக்கு உரித்தானவர். வைத்தியர் வைத்தியசாலைக்குரியவர். எனவே, பாராளுமன்றத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் முகவரிபடுத்தும் போது பெயர்களுக்கு முன்னால் இருக்கும் தொழில்சார் அடைமொழிகளை நீக்குவது ஏற்புடையதாக இருக்கும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...