நடுவானில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு – குர்திஸ்தானில் இலங்கை பெண் உயிரிழப்பு

Date:

உடல்நலம் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் (Erbil International Airport) உயிரிழந்துள்ளார்.

நடுவானில் விமானம் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் விமானம் அவசரமாக எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பயணளிக்காமையால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றதாக குர்திஸ்தானில் உள்ள  இலங்கை தூதரகத்தின் கௌரவ அதிகார அஹமட் ஜலால் தெரிவித்துள்ளார்.

எர்பிலில் உள்ள இலங்கையின் கெளரவ தூதரக அதிகாரி அஹமட் ஜலால்,

டோஹாவில் இருந்து பாரிசுக்கு இந்தப் பெண் விமானத்தில் சென்றுக்கொண்டிருந்த போது இவ்வாறு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளதுடன், தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கெளரவ தூதரக அதிகாரி  அஹமட் ஜலால், கூறியுள்ளார்.

81 வயதான குறித்த இலங்கை பெண் பிரான்சில் வசித்து வருபவர் என குர்திஸ்தானில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் கூறியுள்ளதுடன், இவரின் சடலத்தை பிரான்ஸுக்கு கொண்டுசெல்ல அவரது மகனுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் துணை தூதரகம் கூறியுள்ளது.

“இலங்கை பிரஜை ஒருவருக்கு இப்பகுதியில் இதுபோன்ற சம்பவமொன்று நடப்பது இதுவே முதல் முறையாகும்” என தூதரக அதிகாரி அஹமட் ஜலால் கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...