சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு மகிழ்ச்சி செய்தி

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு செய்துள்ள நிலையில், இதன் மூலம், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, இலங்கைக்கு உடனடி நிதி வசதியாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. 

இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி 1.34 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அதிகரித்துள்ளது. 

இலங்கையின் செயல்பாடு இந்தத் திட்டத்தின் கீழ் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. 

சமூகச் செலவினங்களுக்கான சுட்டெண் இலக்கைத் தவிர, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்கான ஏனைய அனைத்து அளவு இலக்குகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில், பல கட்டமைப்பு அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

சமீபத்தில் நிறைவு செய்யப்பட்ட கடன் மறுசீரமைப்பு பணிகள், கடன் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கான பாதையில் வெற்றிகரமான முடிவாக உள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...