எதிர்கட்சித் தலைவர் சஜித் விடுத்துள்ள அறிவிப்பு

Date:

இந்நாட்டின் இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு உரித்தான ஊழியர் சேம இலாப நிதியம் உட்பட ஏனைய நிதியங்களில் மீது மிகைக்கட்டண வரியை விதிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டதுடன் அதற்கு எதிராக நிபந்தனையின்றி மக்களுக்காக நாம் போராடினோம்.

அதனுடன் நின்று விடாமல் குறித்த வரி சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது.

இதன்பிரகாரம் 13 நிதியங்களை மிகைக்கட்ண வரி விதிப்பில் இருந்து வரி நீக்கம் செய்வதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தின் முன்னிலையில் தெரிவித்தார்.

இது இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்த வெற்றிக்காக நீதிமன்றம் சென்ற ஒரே அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே.உழைக்கும் மக்களின் நாமத்தினால் இந்த வெற்றியை முன்னிட்டு நாம் பெருமையடைகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீட்டிப்பு

சமீபத்திய கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் அமலில் இருந்த நிலச்சரிவு...

அசோக ரன்வல விபத்தில் சிக்கினார்

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி,...

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...