பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் ஆயுதங்கள் மீட்பு

0
307

பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் “கெஹெல்பத்தர பத்மே” மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆயுதங்கள் ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

500க்கும் மேற்பட்ட T-56 வெடிமருந்துகள், 04 T-56 மகசின்கள் மற்றும் ஒரு மைக்ரோ பிஸ்டல் ஆகியவற்றையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

“கெஹெல்பத்தர பத்மே” எனப்படும் மந்தினு பத்மசிறி உட்பட பல பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டனர், மேலும் மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணைகளின் போது தொடர்புடைய தகவல்கள் தெரியவந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here