4.56 லட்சம் குடும்பங்கள் ரூ.25,000 உதவித் தொகைக்கு தகுதி

0
45

பேரிடர் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ரூ.25,000 முன்பண உதவித் தொகையை பெற்றுக்கொள்ள 4,56,846 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ பிரிவின் கூடுதல் செயலாளர் கே.ஜி. தர்மதிலக தெரிவித்தார்.

மேலும், பேரிடர் நிலைமை காரணமாக அமைக்கப்பட்ட 427 பாதுகாப்பு மையங்களில் 12,311 குடும்பங்கள் இன்னும் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பேரிடர் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் ரூ.50,000 நிவாரணத் தொகை, இதுவரை 3,665 குடும்பங்களுக்கு வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது.

இந்த உதவித் தொகைக்காக 1,47,628 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக கூடுதல் செயலாளர் கே.ஜி. தர்மதிலக மேலும் தெரிவித்தார்.

அதேநேரம், ரூ.25,000 மற்றும் ரூ.50,000 நிவாரணத் தொகைகளை வழங்குவதற்கு நில உரிமை ஒரு நிபந்தனையல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதனிடையே, அதிக ஆபத்து பகுதிகளில் தற்போது சுமார் 5,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் இயக்குநர் நாயகம் ஆசிரி கருணாவர்தன, தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு மேற்கொண்டு வரும் ஆய்வுகளுக்கு கணிசமான காலம் எடுத்துக்கொள்ளக்கூடும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here