டக்ளஸை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Date:

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிகமாக விசாரிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் துறை (CID) 72 மணி நேர தடுத்து வைக்கும் உத்தரவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CID விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வரும் விசாரணை ஒன்றின் கீழ், நேற்று (26) டக்ளஸை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது, ஒரு பிஸ்டல் (கைத்துப்பாக்கி) காணாமல் போனது தொடர்பான தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விசாரணை, 2001 ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவிற்கு அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையில் பாரிய வங்கிக் கொள்ளை!

(NDB) தேசிய அபிவிருத்தி வங்கியில் 13.2 பில்லியன் ரூபாய் மோசடி உள்ளக...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு...

கேஸ் விலை உயர்வு

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு...

நாடு திரும்புகிறார் ரணில்!

சிங்கப்பூரில் இதய அறுவை சிகிச்சை செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...