டில்வின் சில்வா – ரணில் குறித்து வெளியான முக்கிய தகவல்

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் என்ற யோசனை JVP மத்திய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 12ஆம் திகதி மாலை JVP மத்திய குழு கூட்டம் நடைபெற்றதுடன், அதில் இது தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான சூழ்நிலைகளால் அரசின் ஆதரவாளர்களிடையே மனச்சோர்வு காணப்படுவதால், அவர்களின் (உற்சாகம்) உயர்த்த டில்வின் சில்வாவின் பாராளுமன்ற நுழைவு உதவியாக இருக்கும் என அந்தக் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆளும் கட்சி உறுப்பினர்களிடையும், நாட்டளவிலும் ஒழுக்கக் குறைவு தென்படுகின்ற நிலையில், தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைய உயர்ந்த ஒழுக்கம் நாட்டில் நிறுவப்பட வேண்டும் என்பதற்காக, கடந்த மூன்று தசாப்தங்களாக JVPயை மிகுந்த ஒழுக்கத்துடன் நடத்தி வந்த அனுபவம் கொண்ட டில்வின் சில்வா பாராளுமன்றத்திற்கு வருவது அரசுக்கு பெரிய பலமாக அமையும் என்றும் சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1994ஆம் ஆண்டு JVPக்கு முதல் பாராளுமன்ற ஆசனம் கிடைத்ததிலிருந்து, கட்சியின் பொதுச் செயலாளர்கள் பாராளுமன்ற பதவிகளை ஏற்காத மரபு இருந்து வந்த போதிலும், தற்போது JVP அரச அதிகாரத்தைப் பெற்றுள்ள நிலையில், பொதுச் செயலாளர் அரச இயந்திரத்திற்குப் புறம்பாக இருப்பதில் அர்த்தமில்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், இது தொடர்பாக கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலிலிருந்து கட்டாயமாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் என்ற யோசனை, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல கட்சிகளிலிருந்தும் முன்வைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் பல சந்தர்ப்பங்களில் இதுகுறித்து ரணில் விக்கிரமசிங்கிடம் கேட்டிருந்தாலும், இதுவரை அவர் தெளிவான பதிலை வழங்கவில்லை என்றும் அந்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...