மனுஷ நாணயக்கார கைது முயற்சி தடுப்பு

Date:

கொரிய வீசா விவகாரம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மூலம் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு வழங்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, நேற்று (19) எஸ். துரைராஜா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பதிலாளர்களின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான லக்மாலி கருணாநாயக்க, இந்த வழக்கிற்கு தொடர்பான வரையறுக்கப்பட்ட எதிர்ப்புகளை பதிலாளர்கள் சார்பில் தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஷானி அபேசேகர வழங்கிய சத்தியப்பிரமாணமும் பதிலாளர் தரப்பால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மனுஷ நாணயக்காரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தற்போதைய கட்டத்தில் தனது வாடிக்கையாளரை கைது செய்யப்படமாட்டாது என குற்றப் புலனாய்வுத் துறை, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த மனுவை தொடர்ந்து முன்னெடுக்க தேவையில்லை எனவும், அதை வாபஸ் பெற அனுமதி வழங்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரினார். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழு, குறித்த அடிப்படை உரிமை மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு

மத்திய காசாகாரத்திலிருந்து அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் தொகை காணாமல் போன...

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...