சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

Date:

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை முன்னேற்றி வருகிறது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“எமது நாட்டின் முக்கியமான பண்பாட்டு திருவிழாவான புத்தாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில், நாடாகவும் உலகளாவிய அளவிலும் பல சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். ஒரு புறம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை உள்ளது. அந்தப் போர் தொடர்ந்தாலும் அல்லது முடிந்தாலும், அதன் தாக்கம் இன்னும் சில மாதங்கள் நீடிக்கும். அதேபோல், நாம் எதிர்கொண்ட ‘டிட்வா’ புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களும் உள்ளன.

இவ்வாறான சவால்கள் மத்தியிலும், நாம் தளராமல் நிலைத்தன்மையுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (15) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...

இன்று முதல் பஸ்களைச் சேவையில்

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின்...

அரச அலுவலகங்கள் இன்று திறப்பு

அரச அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள்...