பசில் மீது மஹிந்தானந்த கடும் விமர்சனம்

Date:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, கோப் கூட்டத்தில் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையின் (CEB) முன்னாள் தலைவர் பெர்டினாண்டோவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெர்டினாண்டோ பின்னர் தனது அறிக்கையை வாபஸ் பெற்று, மின்சார வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற கோப் குழுவின் கூட்டத்தின் போது இந்த அறிக்கை மீளவும் ஆராயப்பட்டது. பசில் ராஜபக்ச நிதியமைச்சராக இருந்த போது இந்தியாவிடம் கடன் பெற்றதாகவும், அதன் வரவு தனக்கென மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் அளுத்கமகே கூறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் விவசாய அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நெருக்கமாக செயற்படுவதுடன் டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்கும் திட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...