மூழ்கும் கப்பலில் அல்ல ஊசலாடும் கப்பலில் ஏறி உள்ளேன் – தம்மிக்க பெரேரா

Date:

நாட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் தான் நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும், தற்போது செய்ய வேண்டியது அப்பிரச்சினைக்கு விடை காண்பதே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது பங்களிப்பை நிறைவேற்றுவதன் மூலம் சவாலை வெற்றிகொள்ள முடியும் எனவும், தான் ஏறியது மூழ்கும் கப்பலில் அல்ல எனவும் வேகமாக ஊசலாடும் கப்பலில் என்றும் அந்த ஆட்டத்தை தன்னால் நிறுத்த முடியும் எனவும் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டார்.

யுத்த காலத்தில் முதலீட்டுச் சபையின் தலைவராக தாம் கடமையாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் இந்த நேரத்திலும் நாட்டுக்குத் தேவையான முதலீடுகளை கொண்டு வர முடியும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...