களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கைது!

Date:

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் மற்றுமொரு பிரதிநிதியும் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூன் 10, 2022 அன்று கல்வி அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தின் போது வாயிலை சேதப்படுத்தியதாக இரு மாணவர் சங்க தலைவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் முதன்நாயக்க மற்றும் மாணவர் சங்கப் பிரதிநிதி டில்ஷான் ஹர்ஷன ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் நாளை (ஜன. 03) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...

UNP – SJB ஐக்கியம்!

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள்...

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...