ஆசிரியர் – அதிபர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு மிக்க மகிழ்ச்சியான செய்தி இதோ!

Date:

ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாட்டை நிவர்த்திசெய்து பொது நிர்வாக அமைச்சினால் சுற்றுநிருபம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி மற்றும் இந்த வருடத்தின் ஜனவரி 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கிணங்க இந்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்காக தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் இணக்கப்பாட்டுடன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறையாகும் வகையில் சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 2020 ஆம் ஆண்டில் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் வழங்குவதற்கு பொதுநிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 51,682 பயிலுனர் பட்டதாரிகளுக்கு இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

இவர்களில் ஒரு வருட பயிற்சியை நிறைவுசெய்த பட்டதாரிகளுக்கு ஜனவரி 03ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒரு வருட பயிற்சியை நிறைவுசெய்யாத பட்டதாரிகளுக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...