மியான்மர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் பணி தீவிரம்

Date:

மியான்மரில் சிக்கியுள்ள 56 இலங்கையர்களை அவசர நடவடிக்கை மூலம் விடுவிக்க மியான்மர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மியான்மர் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், தீவிரவாத கும்பலுடன் பேச்சுவார்த்கைளை விரைவாக முன்னெடுக்க மியான்மர் அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் BINSTIC தூதர்கள் மியான்மர் வெளியுறவுத்துறை துணை அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையும் சாதகமான முறையில் முடிவடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிக்கியுள்ளவர்களை உடனடியாக விடுவிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...