ஏழு பேருக்கு எதிரான வழக்கு: பிரதிவாதிகளை விடுவித்த யாழ். நீதவான் நீதிமன்றம்

Date:

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்துகொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெற்ற பேரணியில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான , சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஏழு பேரே குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துகொள்ளப்பட்டது.

வழக்கு தொடர்பாக பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், பிரதிவாதிகள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட்டு குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

குறித்த வழக்கை கிடப்பில் போட்ட நீதிமன்றம் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...