நல்லூரில் தேசிய தைப்பொங்கல் விழா!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சிவன் கோயிலில் இடம்பெறவுள்ளது.

நல்லாட்சி அரசின் காலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெற்றது. அதில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டபோதும் இறுதி நேரத்தில் அவர் பங்கேற்கவில்லை. அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிலையில் 8 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நல்லூர் சிவன் கோயிலில் பி.ப. 3 மணிக்கு பொங்கல் நிகழ்வு நடைபெறும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொங்கல் பானையில் அரிசியை போட்ட பின்னர், அங்கிருந்து துர்க்கா மணிமண்டபத்துக்கு மங்கல இசை முழங்க அழைத்துச் செல்லப்படுவார். அங்கு அரங்க நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கலந்துகொள்வதற்கான அழைப்பு அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

முக்கிய கோரிக்கைகளுடன் இந்திய துணை ஜனாதிபதியை சந்திக்க இ.தொ.கா தயார்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி...

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...