10 இந்திய மீனவர்கள் கைது

Date:

நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையேயான மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனக் கூறியிருந்தார். இதன் காரணமாக தமிழக மீனவர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர்களை காங்கேசன்துறை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக தமிழக மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....