அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

Date:

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 5 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளபோதிலும், அரசு பல மாதங்களாக அவற்றை நிரப்பாமல் தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.  

நேற்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “உச்ச நீதிமன்றத்தில் 4 காலிப்பணியிடங்கள் எட்டு மாதங்களாக உள்ளன. அவை இன்னும் நிரப்பப்படவில்லை. இன்று உள்ள நிலவரப்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் 5 காலிப்பணியிடங்கள் உள்ளன. மொத்தமாக 9 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன” எனக் கூறினார்.

மேலும், இதுவரை நாட்டின் நீதித்துறை மூப்புரிமை அடிப்படையில், கட்சித் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வந்ததாகவும், தற்போது நீதிபதிகள் நியமனங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர், “நீதிபதிகளுக்கு 67 வயது வரை பதவிக்கால நீட்டிப்பு வழங்கப்பட்டால், மருத்துவர்கள், நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் அதே கோரிக்கையை முன்வைப்பார்கள். ஒவ்வொரு பதவியிலும் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட காலம் பணியாற்றி, பின்னர் கௌரவமாக ஓய்வு பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...