மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் – இருவர் கைது

Date:

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், பெற்றோல் போத்தல் வீதியில் வீழ்ந்து வெடித்துள்ளதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்ற இருவரைப் பொலிஸார் துரத்திச் சென்று பிடித்தனர்.

மண்டைதீவு மற்றும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர் என்றும், இருவரும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தையும், தீவகத்தையும் இணைக்கும் மண்டைதீவு சந்தியில் பொலிஸ் காவலரண் காணப்படுவதால் தீவகப் பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப்பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்துக்குக் கடத்தப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...