ஐந்து ஆண்டு ஆட்சியில் ஒரே ஆண்டில் எல்லாவற்றையும் எதிர்பார்க்க வேண்டாம்

Date:

மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) அதிகாரத்தை வழங்கியது ஐந்து ஆண்டுகளுக்காகவே ஆகும் என்பதால், ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒரு ஆண்டிற்குள் எதிர்பார்க்க வேண்டாம் என விவசாய மற்றும் கால்நடை வளங்கள் தொடர்பான பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

“யாரும் இப்படி எதிர்பார்க்க வேண்டாம். இன்னும் ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய காரியங்களை முதல் ஆண்டிலேயே செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். அது சாத்தியமல்ல. இன்னும் நான்கு ஆண்டுகளில் செய்ய வேண்டியவற்றை இரண்டாவது ஆண்டிலேயே எதிர்பார்க்கவும் கூடாது.

நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். மக்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஐந்து ஆண்டுகளுக்காகவே. தற்போது ஒரு ஆண்டுதான் கடந்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவசியமான அனைத்து விடயங்களையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம்” என அவர் கூறினார்.

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளை மீளமைக்கும் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில், கடந்த 09 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் நிக்கவரட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது துணை அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...