பிரபல போதைபொருள் கடத்தால் குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை

Date:

நீண்ட விசாரணைக்குப் பிறகு, போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பளை விதானலகேவைச் சேர்ந்த சமந்த குமார அல்லது வெலேசுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு தலா எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹெராயின் கடத்தல் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதே இதற்குக் காரணம். இந்தத் தீர்ப்பை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்தி வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பிரதிவாதிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டதுடன், சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்து, பணம் மற்றும் தங்கப் பொருட்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...