Friday, March 29, 2024

Latest Posts

யாழ். மாநகர மேயர் வேட்பாளராக வித்தியாதரனை களமிறக்குகின்றது தமிழரசுக் கட்சி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் ‘காலைக்கதிர்’ நாளிதழின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலகவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் – கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகப் பதவி வகித்த காலகட்டத்தில், இவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அதன்பின்னர் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.

தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைக்குப் புத்துயிர் கொடுக்க முன்னின்று செயற்பட்டவர் இவர்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.