யாழ். மாநகர மேயர் வேட்பாளராக வித்தியாதரனை களமிறக்குகின்றது தமிழரசுக் கட்சி

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் ‘காலைக்கதிர்’ நாளிதழின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலகவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் – கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகப் பதவி வகித்த காலகட்டத்தில், இவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அதன்பின்னர் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.

தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைக்குப் புத்துயிர் கொடுக்க முன்னின்று செயற்பட்டவர் இவர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...