நெதர்லாந்தில் இருந்து 26 மில்லியன் போதைப் பொருள் கடத்தல்

Date:

நெதர்லாந்தில் இருந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டிருந்த 26 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதை வில்லைகளை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு கைப்பற்றியுள்ளது.

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தை வந்தடைந்துள்ள பரிசுப்பொதியொன்றில் இருந்து குறித்த போதை வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.

படுக்கை விரிப்புக்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என தெரிவித்து அனுப்பப்பட்டுள்ள குறித்த பொதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விலாசமிடப்பட்டுள்ளது.

காட்போட் பெட்டியொன்றுக்குள் 01 கிலோ 600 கிராம் நிறையுடைய 4,000 போதை வில்லைகள் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசுப்பொதியைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்துக்கு வருகை தந்திருந்த வௌ்ளவத்தையைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் போதை வில்லைகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதந்த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...

மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்

இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...