முக்கிய செய்திகளின் சாராம்சம் 17.01.2023

0
161

1. கொழும்பு மேயர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நிறுத்த SJB செயற்குழு தீர்மானித்துள்ளது.

2. கடுமையான பணப்புழக்க நெருக்கடி அரசாங்க நிதியை கடுமையாக பாதிக்கிறது. அரசு ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தை 2 தவணைகளில் செலுத்த திரைசேறி தீர்மானித்துள்ளது.

3. உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் “கை” சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீ.ல.சு.க. கொழும்பு, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ஹெலிகாப்டர் சின்னத்தில் போட்டியிடும்.

4. IUSF ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி முகத்திடலுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. IUSF எதிர்ப்பு காரணமாக பௌத்தலோக மாவத்தை மூடப்பட்டது. கொள்ளுபெட்டி புனித அந்தோணியார் வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

5. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் படும் இன்னல்களை அறிவதாகக் கூறுகிறார். 3 அல்லது 4 தவணைகளில் IMF இலிருந்து USD 2.9 பில்லியன் பெறப்படும் என்று உறுதியளிக்கிறார். உலக வங்கி, ADB போன்றவற்றிலிருந்து USD 5 பில்லியன் பெறுவதற்கான திறன் உள்ளதாக கூறுகிறார்.

6. மத்திய வங்கியின் தரவுகள் 2022 இல் தொழிலாளர்களின் பணம் 12 வருடங்களில் மிகக் குறைவாக இருந்ததைக் காட்டுகிறது. 2021 இல் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 31% குறைந்து 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. முந்தைய குறைந்தபட்சம் 2010 இல் 4.1 பில்லியன் டாலர்களாக இருந்தது.

7. நெல் ஆலை உரிமையாளர்கள் பொறுப்பாளர் முதித் பெரேரா கூறுகையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 10 சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலைகள் மூடப்படுகிறது. அதிக வட்டி விகிதங்கள் காரணமாக அவர்கள் தங்கள் கடன்களை செலுத்த முடியவில்லை என்கிறார்.

8. உத்தேச மின் கட்டண திருத்தத்திற்கு ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சரவை செயலாளரிடம் தெரிவித்தார். அதற்கான காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

9. 3வது துடுப்பாட்ட ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை பெற்ற கடும் தோல்வி தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய கிரிக்கெட் அணியின் முகாமையாளருக்கு இலங்கை கிரிக்கெட் அறிவுறுத்தியுள்ளது. 5 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

10. ICC T20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இலங்கை பங்கேற்பது தொடர்பான சிறப்புக் குழு அறிக்கை, விளையாட்டு அமைச்சக செயலாளரால் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனை கேட்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here