தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு!

Date:

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாளை (19) விவாதிப்பதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (18) தீர்மானித்துள்ளது.

இந்தச் சட்டமூலம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக அமையாது என்ற சரத்து ஒன்றை உள்ளடக்குமாறு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அந்த கோரிக்கைக்கு அரசு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான ஒழுங்குமுறைகளை தயாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அப்போது தேர்தல் நடத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டமூலம் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட துருப்புச் சீட்டு என்றும், வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்ட போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் அவ்வாறான சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கிரியெல்ல தெரிவித்தார்.

தேர்தலை பிற்போடுவது நாட்டில் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கலாம் என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட எதிர்க்கட்சிகளின் அரசியல் தலைவர்கள் பலர் இந்த சட்டமூலத்தை இந்த நேரத்தில் கொண்டுவருவதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...