எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு நகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான் இன்று காலை தனது பதவியை இராஜினாமா செய்தார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் அவர் பதவி விலகியுள்ளார்.
கொழும்பு நகர சபையின் மேயர் பதவிக்கு அவரை முன்னிலைப்படுத்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
N.S