நானுஓயா விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம்

Date:

நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியின் “சமர் செட்” பகுதியில் பஸ்ஸொன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதி விபத்துள்ளாகினதில் எழுவர் பலியாகியுள்ளனர். மேலும் 53 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து நேற்று (20) வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது.

விபத்தில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும், விபத்துக்குள்ளான ஆட்டோவின் சாரதி ஒருவருமாக 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

வேனில் பயணம் செய்த இரு ஆண்களும், ஒரு பெண்ணும் மூன்று சிறார்களும் மற்றும் ஆட்டோ சாரதியுமே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்துள்ள பாடசாலை மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்தவர்களின் விபரம்,

01:- அப்துல் ரஹீம் (55)

02:- ஆயிஷா பாத்திமா (45)

03:- மரியம் (13)

04:- நபீஹா (08)

05:- ரஹீம் (14)

06:- நேசராஜ் பிள்ளை (25) (சாரதி)

ஆட்டோ சாரதி

07:- சன்முகராஜ் (25)

கொழும்பு தேர்ஸ்டன்

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...

கல்பிட்டி கடற்கரையில் ஒரு தொகை ஐஸ்

நேற்று (5) இரவு கல்பிட்டி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்தபோது...