நானுஓயா விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம்

Date:

நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியின் “சமர் செட்” பகுதியில் பஸ்ஸொன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதி விபத்துள்ளாகினதில் எழுவர் பலியாகியுள்ளனர். மேலும் 53 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து நேற்று (20) வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது.

விபத்தில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும், விபத்துக்குள்ளான ஆட்டோவின் சாரதி ஒருவருமாக 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

வேனில் பயணம் செய்த இரு ஆண்களும், ஒரு பெண்ணும் மூன்று சிறார்களும் மற்றும் ஆட்டோ சாரதியுமே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்துள்ள பாடசாலை மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்தவர்களின் விபரம்,

01:- அப்துல் ரஹீம் (55)

02:- ஆயிஷா பாத்திமா (45)

03:- மரியம் (13)

04:- நபீஹா (08)

05:- ரஹீம் (14)

06:- நேசராஜ் பிள்ளை (25) (சாரதி)

ஆட்டோ சாரதி

07:- சன்முகராஜ் (25)

கொழும்பு தேர்ஸ்டன்

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...