சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்

Date:

சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க (இளையவர்) அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை (Impeachment) முன்வைப்பது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலும் தற்போது அரசுக்குள் நடைபெறவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கேள்வி –

“அமைச்சரே, சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை கொண்டு வர அரசின் தரப்பில் ஏதேனும் யோசனை உள்ளதா? ஏனெனில் 21ஆம் தேதி ஒரு போராட்டமும் நடைபெற உள்ளது…”

பதில் –

“அத்தகைய விஷயம் தற்போது விவாதிக்கப்படவில்லை. இதைப்பற்றி விரிவாக கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், நீங்கள் காணும் நிகழ்வுகள் குறித்து நாங்களும் கவனமாக இருப்பதாக மட்டும் கூற முடியும்.”

இந்த கருத்தை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்கும்போது தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...