மைத்திரிபால சிறிசேனவின் மகளின் வீட்டை உடைத்து கொள்ளை!

Date:

முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் மகளின் இரண்டு மாடி வீட்டை உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை திருடியுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை, விக்கிரமசிங்க பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் மகளின் கணவர் குறித்த வீட்டிற்கு வந்த போது வீட்டின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில், சில நபர்களால் வீட்டின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வீட்டின் அலுமாரியில் இருந்த 150,000 ரூபா பெறுமதியான பணம் ,தங்கத்தினால் செய்யப்பட்ட ஓட்டகம் சிலை, கைக்கடிக்காரம், 8 சிங்கப்பூர் தங்க நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பு–6 குடியிருப்பு திட்டம்: 84 குடும்பங்கள் சிக்கலில் – ரூ.500 மில்லியன் மோசடி!!

தனது சொந்த வீட்டை வாங்குவது ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் மிகப்பெரிய கனவாகும்....

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...