மைத்திரிபால சிறிசேனவின் மகளின் வீட்டை உடைத்து கொள்ளை!

Date:

முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் மகளின் இரண்டு மாடி வீட்டை உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை திருடியுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை, விக்கிரமசிங்க பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் மகளின் கணவர் குறித்த வீட்டிற்கு வந்த போது வீட்டின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில், சில நபர்களால் வீட்டின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வீட்டின் அலுமாரியில் இருந்த 150,000 ரூபா பெறுமதியான பணம் ,தங்கத்தினால் செய்யப்பட்ட ஓட்டகம் சிலை, கைக்கடிக்காரம், 8 சிங்கப்பூர் தங்க நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...