ஊர்காவற்றுறையில் கோர விபத்து : எட்டு பேர் வைத்தியசாலையில்

Date:

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர்.

ஒருவர் படுகாயமடைந்த நிலையிலும், எழுவர் சிறியளவான காயங்களுடனும்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட்னர்.

பஸ்ஸின் சாரதிகள் இருவரும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை 6.30 மணியளவில் பயணி ஒருவரை ஏற்றுவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வீதியில் நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோதியுள்ளது.

இதன்போது இரண்டு பஸ்களும் பலத்த சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வாகனம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய...

வெலிக்கடை தமிழர் படுகொலை! கொல்லப்பட்ட குட்டிமணி மற்றும் குழுவினர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வெளியாகியுள்ளது! (EXCLUSIVE)

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் சிங்கள கைதிகளால் இரண்டு நாட்களில்...

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...