ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சருடன் சஜித் சந்திப்பு

Date:

ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் உள்ளிட்ட ஐக்கிய இராச்சியத்தின் தூதுக்குழுவினரை எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழு சந்தித்து கலந்துரையாடியது.

இந்த சந்திப்பின் போது, நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உதவியை வழங்குமாறும், சுற்றுலாத் துறை தொடர்பாக ஐக்கிய இராச்சிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தூதுக்குழுவினரிடம் சஜித் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பில் ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்டின் பிரத்தியேகச் செயலாளர் ரொப் கோர், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பேட்ரிக் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாம் செயலாளர் அலெக்சாண்டர் ஸ்மித் ஆகியோருடன், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹுமான் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் ஏரான் விக்ரமரத்னவும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...