ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சருடன் சஜித் சந்திப்பு

Date:

ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் உள்ளிட்ட ஐக்கிய இராச்சியத்தின் தூதுக்குழுவினரை எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழு சந்தித்து கலந்துரையாடியது.

இந்த சந்திப்பின் போது, நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உதவியை வழங்குமாறும், சுற்றுலாத் துறை தொடர்பாக ஐக்கிய இராச்சிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தூதுக்குழுவினரிடம் சஜித் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பில் ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்டின் பிரத்தியேகச் செயலாளர் ரொப் கோர், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பேட்ரிக் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாம் செயலாளர் அலெக்சாண்டர் ஸ்மித் ஆகியோருடன், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹுமான் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் ஏரான் விக்ரமரத்னவும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...