Thursday, April 25, 2024

Latest Posts

சிலரை 20 வருடமா திருத்த முயன்றும் முடியவில்லை – சுமந்திரன் பேச்சு

20 வருடாமாக கூட இருந்தவர்களை நல் வழிப்படுத்த எடுத்த முயற்சியிலும் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் ஆயுதக் குழுக்கள் பல கூட்டமைப்புடன் இணைந்திருந்த காலத்தில் பேசாதிருந்துவிட்டு தற்போது அவர்கள் தொடர்பில் குறை கூறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றதே என ஊடகவியலாளர்கள்  எழுப்பிய கேள்வியின்போதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் விபரம் தெரிவிக்கையில்,

இணைந்திருந்த காலத்திலும் நான் பல தடவை கூறியுள்ளேன் இப்போதும் கூறுகின்றேன்.  எந்தச் சந்தியிலும் நின்று எவனையும் காட்டிக் கொடுக்கவில்லை. எங்கையும் முகத்தை மூடிக்கொண்டுபோய் தலையாட்டவில்லை. தூள் கடத்தவில்லை. இவ்வாறானவர்களும் இணைந்திருந்தனர். அதன்போதும் நான் இதனை பகிரங்கமாக கூறியுள்ளேன் அதனை இப்போதும் கூறுகின்றேன். இவ்வாறு தலையாட்டிய பழக்கதோசம் இன்றும் விட்டுப்போகவில்லை.

இதேநேரம் அதில் ஒருவர் 80 ஆம் ஆண்டு இதனைச் சாதித்தோம், 1985இல் இதனைச் சாதித்தோம் 1987இல், 1989, 1994 இல் 2001,இல் 2004இல் இதனைச் தாதித்தோம் என வரலாற்றுப்  பட்டியலிடுகின்றார். அதே பட்டியலில் எத்தனையாம் ஆண்டுகளில் யாரைப் போட்டுத் தள்ளினோம், எத்தனொயாம் ஆண்டு அரச கூலிப்படையாக சேர்ந்தியங்கினோம் என்றதனைக்கூற மறந்துவிட்டார் என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.