Friday, March 29, 2024

Latest Posts

ஆசிரியை மீது பாலியல் வன்கொடுமை முயற்சி – மொட்டுக் கட்சி முக்கியஸ்தர் கைது

39 வயதுடைய பெண் ஆசிரியையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஹொரண பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரகஹஹேனவில் உள்ள கடையொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது லொறியில் வந்த முன்னாள் பொதுஜன பெரமுன உறுப்பினர் அதிலிருந்து இறங்கி அவரை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது சந்தேக நபரின் பிடியில் இருந்து தப்பி அருகில் உள்ள வீட்டை நோக்கி ஆசிரியை ஓடியுள்ளார்.

119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த பெண் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசியல்வாதிக்கும் பெண் ஆசிரியருக்கும் நிதி விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.