புதிய வரியை அறிமுகப்படுத்தும் இலங்கை

Date:

எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

மறைமுக வரி விதிப்பால் பொருட்களின் விலை உயராது என்றும், பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, 2025ஆம் ஆண்டு புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சொத்து வரி என்பது நேரடி வரி என்றும், அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப்படும் குறிப்பிட்ட தொகைதான் வரி என்றும் நிதித்துறை அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...

யோஷித ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது...

இன்னும் தேடப்படும் நிலையில் உள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க...