கொழும்பில் சிசிரிவி மூலம் கண்காணிக்கப்பட்ட 610 போக்குவரத்து விதி மீறல்கள்!

Date:

போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய சிசிரிவி கமராக்களைப் பயன்படுத்திய வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் 610 போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் சிசிரிவி பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி முதல் கொழும்பு நகரின் வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி பாதுகாப்பு கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறியும் வேலைத்திட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த வேலைதிட்டதின் படி கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 610 வாகன சாரதிகள் பொலிஸ் சிசிரிவி பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

வழித்தடத்தை மாற்றுதல், சமிக்ஞை விளக்குகளின்படி வாகனம் செலுத்தாமை, வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துதல், சிவப்பு விளக்குகளை ஒளிரவிட்டு வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் இனங்காணப்பட்டுள்ளன.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...