கொழும்பில் சிசிரிவி மூலம் கண்காணிக்கப்பட்ட 610 போக்குவரத்து விதி மீறல்கள்!

Date:

போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய சிசிரிவி கமராக்களைப் பயன்படுத்திய வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் 610 போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் சிசிரிவி பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி முதல் கொழும்பு நகரின் வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி பாதுகாப்பு கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறியும் வேலைத்திட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த வேலைதிட்டதின் படி கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 610 வாகன சாரதிகள் பொலிஸ் சிசிரிவி பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

வழித்தடத்தை மாற்றுதல், சமிக்ஞை விளக்குகளின்படி வாகனம் செலுத்தாமை, வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துதல், சிவப்பு விளக்குகளை ஒளிரவிட்டு வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் இனங்காணப்பட்டுள்ளன.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...