கொழும்பில் சிசிரிவி மூலம் கண்காணிக்கப்பட்ட 610 போக்குவரத்து விதி மீறல்கள்!

Date:

போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய சிசிரிவி கமராக்களைப் பயன்படுத்திய வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் 610 போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் சிசிரிவி பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி முதல் கொழும்பு நகரின் வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி பாதுகாப்பு கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறியும் வேலைத்திட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த வேலைதிட்டதின் படி கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 610 வாகன சாரதிகள் பொலிஸ் சிசிரிவி பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

வழித்தடத்தை மாற்றுதல், சமிக்ஞை விளக்குகளின்படி வாகனம் செலுத்தாமை, வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துதல், சிவப்பு விளக்குகளை ஒளிரவிட்டு வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் இனங்காணப்பட்டுள்ளன.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...