ஆசிரியை மீது பாலியல் வன்கொடுமை முயற்சி – மொட்டுக் கட்சி முக்கியஸ்தர் கைது

Date:

39 வயதுடைய பெண் ஆசிரியையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஹொரண பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரகஹஹேனவில் உள்ள கடையொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது லொறியில் வந்த முன்னாள் பொதுஜன பெரமுன உறுப்பினர் அதிலிருந்து இறங்கி அவரை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது சந்தேக நபரின் பிடியில் இருந்து தப்பி அருகில் உள்ள வீட்டை நோக்கி ஆசிரியை ஓடியுள்ளார்.

119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த பெண் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசியல்வாதிக்கும் பெண் ஆசிரியருக்கும் நிதி விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...