அம்பாறை வெள்ள பாதிப்பு பகுதிகளை உடனே புனரமைப்பு செய்ய அரச அதிபருக்கு ஆளுநர் பணிப்பு

Date:

அம்பாறை மாவட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கலந்தாய்வு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

சேதமடைந்த வீதிகள், நீர்ப்பாசன குளங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை ஆளுநர் அறிவுறுத்தினார்.

வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள தற்போதைய உட்கட்டமைப்புகளை புனரமைப்பு செய்வதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை எனவும், உடனடியாக செயற்படுமாறும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் அறிவுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...