சனத் நிஷாந்தவுக்குப் பதிலாக ஜகத் பிரியங்கர நாடாளுமன்றுக்கு

Date:

எல்.கே. ஜகத் பிரியங்கரவின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருப்பதாகவும், அந்தப் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 05 நாடாளுமன்ற ஆசனங்களை வென்றதுடன், விருப்புரிமைப் பட்டியலில் சனத் நிஷாந்த முதலிடம் பிடித்தார்.

ஏனைய நால்வராக பிரியங்கர ஜயரத்ன, அருந்திக பெர்னாண்டோ, சிந்தக அமல் மாயாதுன்ன மற்றும் அசோக பிரியந்த ஆகியோர் அக்கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதோடு எல்.கே. ஜகத் பிரியங்கர விருப்பு வாக்குகளாக 40,527 பெற்று பட்டியலில் ஆறாவது இடத்தினை பெற்றிருந்தார்.

இதன்படி, சனத் நிஷாந்தவின் மரணத்தினால் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கு ஜகத் பிரியங்கரவுக்கு உரிமை உள்ளதுடன், அவர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...