Thursday, April 25, 2024

Latest Posts

கத்தோலிக்க திருச்சபை சுதந்திர தின விழாவை புறக்கணிக்கிறது!

இலங்கை கத்தோலிக்க திருச்சபை பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.

இன்று (பிப்ரவரி 01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய திருத்தந்தை சிறில் காமினி, சுதந்திர தின நிகழ்வுக்கு அரசாங்கம் 2000 கோடி ரூபாயை ஒதுக்கியதை எதிர்த்தார். இந்த நிகழ்வுக்கு 200 மில்லியன், என்பது பெரிய விரயம் என்று சாடினார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் ஏனைய உறுப்பினர்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

உணவுப் பற்றாக்குறை, குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வேலைப் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் மக்கள் போராடி வரும் இந்த நேரத்தில், சுதந்திர தின விழாவைக் கொண்டாட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. காமினி மேலும் தெரிவிக்கையில், தினசரி மின்சாரத் தடைகள், சட்டத்தின் ஆட்சியில் சரிவு மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவை அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மேலும் அதிகரிப்பதாகக் குறிப்பிட்டார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.