டொலர் மோசடி செய்த இரு வர்த்தகர்கள் குறித்து சிஐடி விசாரணை

Date:

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 260 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடியான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த வர்த்தகர்கள் இருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (31) கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகலவிடம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நூரா மல்டி டிரேடர்ஸ் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக பேரீச்சம்பழம், தங்கம் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வர்த்தகர்கள் இருவரும் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இதன்படி, 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...