டொலர் மோசடி செய்த இரு வர்த்தகர்கள் குறித்து சிஐடி விசாரணை

Date:

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 260 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடியான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த வர்த்தகர்கள் இருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (31) கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகலவிடம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நூரா மல்டி டிரேடர்ஸ் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக பேரீச்சம்பழம், தங்கம் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வர்த்தகர்கள் இருவரும் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இதன்படி, 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...