வேலை நிறுத்த போராட்டம் தொடரும் ; தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

Date:

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 6.30 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளும் இன்று முடங்கின.

இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியிருந்ததுடன், வைத்தியசாலை நடவடிக்கைகளை தொடர்வதற்காக படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்கத்தினால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்காததால் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

முக்கிய கோரிக்கைகளுடன் இந்திய துணை ஜனாதிபதியை சந்திக்க இ.தொ.கா தயார்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி...

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...