வேலை நிறுத்த போராட்டம் தொடரும் ; தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

Date:

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 6.30 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளும் இன்று முடங்கின.

இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியிருந்ததுடன், வைத்தியசாலை நடவடிக்கைகளை தொடர்வதற்காக படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்கத்தினால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்காததால் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...