வேலை நிறுத்த போராட்டம் தொடரும் ; தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

Date:

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 6.30 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளும் இன்று முடங்கின.

இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியிருந்ததுடன், வைத்தியசாலை நடவடிக்கைகளை தொடர்வதற்காக படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்கத்தினால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்காததால் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக்...

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...