வேலை நிறுத்த போராட்டம் தொடரும் ; தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

Date:

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 6.30 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளும் இன்று முடங்கின.

இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியிருந்ததுடன், வைத்தியசாலை நடவடிக்கைகளை தொடர்வதற்காக படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்கத்தினால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்காததால் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...