ஷிரந்தி, நாமலுக்கு CID ஒரே நாள் அழைப்பு

Date:

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனையின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ ஆகியோர், குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்பு வரும் 3ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷிரந்தி ராஜபக்ஷ “சிரிலிய சவியா” திட்டம் தொடர்பான விசாரணைக்காக விளக்கமளிக்க அழைக்கப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கு முன் வழங்கப்பட்ட திகதியில் ஆஜராக முடியாது என தெரிவித்து, வேறு திகதி கோரியிருந்ததாகவும், அதன்படி வரும் 3ஆம் நாள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாமல் ராஜபக்ஷ அதே நாளில் காலை 9.30 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவருக்கு எதிராக உள்ள புகார் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் அறியப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...