Saturday, April 20, 2024

Latest Posts

தன்னை வல்லுறவு செய்த வந்த நபரின் கைவிரலை கடித்து துப்பிய பெண்!

கந்தேகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு நள்ளிரவில் பலவந்தமாக நுழைந்து பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட நபரொருவரின் விரலை குறித்த பெண் கடித்து துப்பியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாத்காரத்தின் போது காயமடைந்த நபர் அப்பகுதியை விட்டு வெளியேறியதாகவும் ஆனால் காயமடைந்த விரலுக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான எந்த தகவலும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது, அத்துமீறி நுழைந்த நபர் தன்னை ஒரு பெட்ஷீட்டில் சுற்றிக் கொண்டு, அடையாளம் தெரியாத வகையில் உள்ளே நுழைந்துள்ளார். இருப்பினும், அந்த நபர் தன்னை வலுக்கட்டாயமாக துஸ்பிரயோகம் செய்ய முயன்றபோது, பெண் அவனுடைய ஒரு விரலைக் கடித்து துண்டித்துள்ளார். இதனால் அவர் கடுமையான வலியுடன் ஓடிவிட்டார்.

119க்கு அழைப்பு விடுத்து விசாரணைகளை ஆரம்பித்ததன் பேரில் தங்கெட்டிய பொலிஸ் நிலையத்தின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்தது. எனினும் சந்தேக நபரை அடையாளம் காண முடியவில்லை என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

துண்டாக்கப்பட்ட கைவிரலை வைத்து சந்கேநபரை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.