இலங்கை – தாய்லாந்துக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

Date:

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று (03) கைச்சாத்திடப்பட்டது.

தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருட்கள் வர்த்தகம், முதலீடு, சுங்க செயற்பாடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையின் இரத்தினக்கல் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (GJRTI) மற்றும் தாய்லாந்தின் இரத்தினக்கல் ஆபரண நிறுவனம் (GIT) ஆகியவற்றுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

இலங்கை – தாய்லாந்து விமான சேவைகளுக்கு இடையிலான தாராளமயப்படுத்தப்பட்ட புதிய இரு தரப்பு விமான சேவைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...