ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் காலி முகத்திடல் மைதானத்தை வந்தடைந்த பின்னர் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு ஆரம்பமானது.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முப்படைத் தளபதிகளால் அரச தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
“நமோ நமோ மாதா – ஒரு நூற்றாண்டை நோக்கிய ஒரு பெரிய படி” என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் சுதந்திர தின இந்நிகழ்வு, ஜனாதிபதி நிகழ்வில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றியவுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
அவரது வருகைக்கு முன்னதாக, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஏனைய முக்கிய விருந்தினர்கள் நிகழ்விடத்திற்கு வருகை தந்ததை காணமுடிந்தது.
N.S