கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை (Exposition) ஆரம்பித்து வைத்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்குக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.
2025 ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு மேற்கொண்ட தனது விஜயத்தின் போது, இந்த புனித அவசரங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் மக்களுக்கு அவற்றை வணங்குவதற்கான அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இரு நாடுகளும் ஆழமான நாகரிக மற்றும் ஆன்மீக பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்ட அவர், கருணை, அமைதி மற்றும் சமரசம் குறித்த புத்தபகவானின் காலத்தால் அழியாத போதனை மனிதகுலத்தை என்றும் வழிநடத்தட்டும் என வாழ்த்துத் தெரிவித்தார்.
